பேயாரும் அரசரும் - தருமையாதீனப்புலவர் சிவத்திரு.அம்பலத்தரசு
"பேயாரும் அரசரும்" - "அம்மையும், அப்பரும்" திருப்பணிச் சக்ரவர்த்தி திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பழநியம்பதியில் எழுந்தருளி இருந்த போது, வானொலியில் திரையிசைப்பாடல் ஒன்றினைக் கேட்டார். அருகிலிருந்த விடுதிப் பணியாளரிடம் "இது யார் பாடிய பாடல் என்று கேட்டார். அதற்கு பணியாளரோ, பாடகரின் பெயரினைக் குறிப்பிடாமல், பாடலுக்கு வாய் அசைத்த நடிகரின் பெயரினைக் குறிப்பிட்டார். இச்சம்பவம், வாரியார் சுவாமிகளுக்கு ஓர் உண்மையை உணர்த்தியது. திரைக்கு பின்னால் இருந்து பாடுபவர் ஒருவர், ஆனால் திரைக்கு முன்னிருத்து வாய் அசைப்பவரையே உலகம் பாடகராக எண்ணுகிறது. அதே போன்றுதான், பன்னிரு திருமுறையாசிரியர்களும் வாய் அசைத்தவர்களே என்றும், அவர்களை உள்ளிருந்து பாட வைத்தவர் ஒருவரே என்றும், அவரே நம்பெருமான் நாரிபாகன் என்றும் உணர்ந்தார். ஆம், அன்பர்களே! அதனால்தான் பன்னிரு திருமுறையாசிரியர்களின் வாக்குகளில் முரண்பாடுகள் இல்லை. மேலும் திருமுறைப்பாடல்களுக்கு விளக்கங்கள் தனியே தேட வேண்டாம், அதற்குள்ளேயே அமைந்துள்ளது என்று தமிழ் கூறும் நல்உலகம் எங்கும் சென்று எடுத்துரைத்தார், தருமையாதினப்புல