Posts

சுந்தரரின் திருப்புகலூர் திருப்பதிகம் - டாக்டர் மணிமேகலை

பன்னிரு திருமுறையில் முதல் ஏழு திருமுறைகளும் தேவாரம் என்று வழங்கப்படுகின்றன.இத்தேவாரத் திருப்பதிகங்களை ஓதும் முறைக்குப் பண்முறை எனவும் தலமுறை எனவும் வரலாற்று முறை எனவும் வழங்கி வருகின்றனர். பண்முறை எனப்படுவது தேவாரம் பாடிய அருளாளர்கள் அப்பதிகங்களுக்குப் பண்களை அமைத்துப் பாடியுள்ளனர் .அப்பண்களுக்குரிய திருப்பதிகங்களை வரிசையாக அமைத்து வழங்கும் முறையாகும் தலமுறை என்றால் தில்லைப் பெருங்கோயிலை முதன்மையாக வைத்துத் தலங்களுக்குரிய பதிகங்களை வரிசையாக அமைத்து வழங்குவதாகும். வரலாற்று முறை என்றால் மூவர் வழிபட்டுச் சென்ற அடிச்சுவட்டில் தலங்களை வரிசைப் படுத்துவதாகும். சுந்தரர் பாடிய பாடல்களில் இன்று கிடைத்திருக்கும் பதிகங்கள் நூறாகும்.ஒவ்வொரு தலத்திற்கும் நேரடியாகச் சென்று பாடிய பாடல்களும் ஒரு தலத்திலிருந்து மற்றொரு தலத்தை நினைத்துப் பாடிய பதிகங்களுமாக அவை அமைகின்றன.சுந்தரரின் பாடல்கள் ஏழாம் திருமுறையில் இடம் பெறுகின்றன. அதில் திருப்புகலூர் திருத்தலத்திற்கு உள்ள பதிகத்தை மட்டும் இக்கட்டுரை ஆய்கின்றது. முன்னுரை சோழவள நாட்டின் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள எழுபத்தைந்தாவது சிவத்தலம் திருப்பு...

பக்தி - அ.ச ஞானசம்பந்தன்

Image
                                                                                இந்தப் பெரிய உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால், எல்லா மொழிகளும், முழு வளர்ச்சி பெற்றவை அல்ல. சில மொழிகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. ஒரு மொழி வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், அதன் பொருள் என்ன? நல்ல இலக்கணம், இலக்கியம் நிறைந்துள்ள மொழியை வளர்ச்சி அடைந்துள்ள மொழி என்று கூறுகிறோம். அம்முறையில் பார்ந்தால் முழு வளர்ச்சி பெற்ற மொழியாகும் நம் தமிழ் மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இம் மொழியில், நிறைந்த இலக்கண இலக்கியங்கள் உண்டு. அவ்வளவு பழைய இலக்கியத்திலும் ஒரு தனிச் சிறப்பை உடையது நம் தமிழ் மொழி. இந்த வளம் பற்றிப் பாடும் சிறப்பை அப்பொழுதே பெற்றுள்ள மொழி இதுவாகும். மிகப் பழைய பாடல்களான முருகப் பெருமானைப்பற்றிக் கூறும் திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் இருக்...

காரைக்காலம்மை கட்டுரை 2 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

காரைக்காலம்மை கட்டுரை - 1 சித்தாந்தம் என்ற பொதுச்சொல் தமிழ் ஆன்மிக மரபில் சைவ சித்தாந்தத்தையே சுட்டி நிற்கும். ஆதியிலிருந்து வரும் மரபு என சைவர்கள் பற்றின் மிகுதியால் சொன்னாலும் ஐந்தாம் நூற்றாண்டை சித்தாந்தத்தின் துவக்கமாக் கொள்வது ஆய்வுகளின் முடிவு. ஆனால் காரைக்காலம்மை இந்த காலத்திற்கும் முற்பட்டவர் என்பது நினைவில் இருத்த வேண்டிய ஒன்று. ஆகவே சித்தாந்தம் பின்பற்றி ஒழுகுவதற்கான நியம, நிட்டைகளை வலியுறுத்தி, வணங்கத்தக்க இறைவனின் பண்பு நலன்களை வரையறுத்து சொல்லும்போது உருவாகி வரும் சிவத்தை  அம்மையிடம் காண முடியாது. வரையறைக்கு உட்பட்ட சிவமும், அதனை மீறி எழும் பரசிவமும் அம்மையிடம் மாறி மாறி வெளிப்படுவதைக் காணலாம்.  இதுவன்றே ஈசன்    திருவுருவம் ஆமா றிதுவன்றே என்றனக்கோர்    சேமம் - இதுவன்றே மின்னுஞ் சுடருருவாய்    மீண்டாயென் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.  அம்மையின் ஆழுள்ளத்தில் பரசிவம் தன்னைக் காட்டிக் கொண்ட வடிவை தன் நினைவாலே மீள மீள சிந்திக்கும் காரைக்காலம்மைக்கு அவன் தோன்றும் வடிவம் “மின்னுஞ் சுடருருவாய்” தெரிகிறது. அம்மையின...

பேயாரும் அரசரும் - தருமையாதீனப்புலவர் சிவத்திரு.அம்பலத்தரசு

"பேயாரும் அரசரும்" - "அம்மையும், அப்பரும்"  திருப்பணிச் சக்ரவர்த்தி திருமுருக கிருபானந்த  வாரியார் சுவாமிகள் பழநியம்பதியில் எழுந்தருளி இருந்த போது, வானொலியில் திரையிசைப்பாடல் ஒன்றினைக் கேட்டார். அருகிலிருந்த விடுதிப் பணியாளரிடம் "இது யார் பாடிய பாடல் என்று கேட்டார். அதற்கு பணியாளரோ, பாடகரின்  பெயரினைக் குறிப்பிடாமல், பாடலுக்கு வாய் அசைத்த நடிகரின் பெயரினைக் குறிப்பிட்டார். இச்சம்பவம், வாரியார் சுவாமிகளுக்கு ஓர் உண்மையை உணர்த்தியது.  திரைக்கு பின்னால் இருந்து பாடுபவர் ஒருவர், ஆனால் திரைக்கு முன்னிருத்து வாய் அசைப்பவரையே உலகம் பாடகராக எண்ணுகிறது. அதே போன்றுதான், பன்னிரு திருமுறையாசிரியர்களும் வாய் அசைத்தவர்களே என்றும், அவர்களை உள்ளிருந்து பாட வைத்தவர் ஒருவரே என்றும், அவரே நம்பெருமான் நாரிபாகன் என்றும் உணர்ந்தார்.  ஆம், அன்பர்களே! அதனால்தான் பன்னிரு திருமுறையாசிரியர்களின் வாக்குகளில் முரண்பாடுகள் இல்லை. மேலும் திருமுறைப்பாடல்களுக்கு விளக்கங்கள் தனியே தேட வேண்டாம், அதற்குள்ளேயே அமைந்துள்ளது என்று தமிழ் கூறும் நல்உலகம் எங்கும் சென்று எடுத்துரைத்தார், தருமையாதினப்புல...

அருட் பித்தனின் துதி வாசகம் 2 - இளம்பரிதி

 தாயே ஆகி, வளர்த்தனை போற்றி! வேதங்கள் துதித்த தெய்வத்தை, பொதுமக்களின் மொழிதனில் போற்றி பாடின பக்தி செய்யுள்கள். உலகில் உள்ள பக்தி இலக்கியங்களில் தெய்வத்தை அத்தனை மனித தன்மை பொருந்திய ரூபமாய் மாற்றி, பாவிகளும் தீண்டி அனைத்துக் கொள்ளும் அளவுக்கு அருகில் அமரச் செய்ததில் விவிலியத்திற்கு அதிக பங்குண்டு, தேவன் உன் அருகிலே தான் இருக்கிறார் என்பதை உணர்த்தி சொல்லிய பக்தி செய்யுள் அது.  பழைய ஏற்பாட்டில் தாவீதின் சங்கீதம் என்ற பகுதி மிகுதியான புகழ் பெற்றது, திருவாசகத்தின் போற்றி திருவகவல் பகுதியின் அருகில் வைத்து ஒப்புநோக்கு வதற்கு ஏற்ற பகுதி அது. பழைய ஏற்பாட்டில் வரும் தாவீது இயற்றிய சங்கீதம் கிறிஸ்துவுக்கு ஆயிரம் வருடம் முந்தியது, மாணிக்கவாசகரின் திருவாசகம் காலகட்டம் பொதுயுகம் 900 ஆம் ஆண்டுக்கு உட்பட்டது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளில் ஒற்றை கடவுளை துதிக்கும் பாடல்கள் கிருஸ்துவத்தில் இருந்து சைவ சமயம் வரை எப்படி எல்லாம் மாற்றம் அடைந்துள்ளது என்பதை தொகுத்து பார்க்க வேண்டும் என்பதே என் நோக்கம். ( எந்த சமயம் மூத்தது, எது உயர்ந்தது என்றெல்லாம் பாகுபாடு செய்து பார்ப்பது இந்த கட்டுரையின்...

காரைக்காலம்மை கட்டுரை 1 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

  மயிலை கபாலீஸ்வரர் கோவில் பிராகாரத்தில் கோசாலை அருகே கோவிலின் தலவிருட்சம் புன்னை மரம். சுற்றி வருகையில் அந்த மரத்தைப் பார்க்கும்போது சங்கப்பாடல்களில் முடத்தாள் புன்னை என புன்னைக்கு முன்னொட்டாக சொல்லப்படும் முடத்தாள் எனும் சொல் காட்சியாக கண்முன் நிற்பதை உணர்ந்தேன். ஒரு நொடி உள்ளே சில்லென ஆனது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த ஒரு காலத்திலிருந்து எழுந்து வந்த சொல் இன்றும் பிரத்யட்ச பிரமாணமாக , கண்முன் மெய்யென துலங்கி நிற்கும் அதிசயத்தை கவிதை நிகழ்த்தியதா , இயற்கை நிகழ்த்தியதா , காலம் தாண்டி மானுட மனங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிக் கொண்ட மீமனம் எனக்குள் வந்து என் உணர்வை தொட்டுச் சென்றதா... அந்த ஆய்வை விட வளைந்த தண்டோடு மட்டுமே நின்ற , நிற்கும் அதுவரை நான் கண்ட அனைத்து புன்னைகளும் ஒருசேர நினைவில் எழும் அழகின் பாரத்தால் கால்கள் தொய்ய அமர இடம் தேடினேன். புன்னையின் நிழலிலேயே சிறு மண்டபம். அம்மை உமை மயில் வடிவில் அப்பன் சிவனை பூசித்த காட்சி கல்லில் வடிக்கப்பட்டு அதற்கென கட்டப்பட்ட தனிச் சன்னதி. அந்த சன்னதியிலிருந்து நீண்டு நாலுக்கு நாலு என கட்டப்பட்ட நந்தி மண்டபம். அதன் விளிம்பில் புன்னையைப்...

கசிந்துள்ளுருகும் நலம் - தாமரைக்கண்ணன்

Image
குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான் மகனொடும், அறுவர்ஆனேம்; எம்முழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்; புகல் அருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.' இராமன்  குகன் சுக்ரீவன் விபீடணன் ஆகியோரை தனது சகோதரர்களாக சேர்த்துச்சொல்லும் புகழ்பெற்ற கம்பனின் பாடல் இது. இராமன் தனது அன்புள்ளத்தால் தன் அருகனைவோரை தம்பியராக சேர்த்துக்கொண்டான். அதில் வேடனான குகனும், குரங்கினத்தவனாகிய சுக்ரீவனும், அரக்கனாகிய வீடணனும் உண்டு. அறத்தின்மூர்த்தியாகிய ராமனின் வரிசைப்படுத்தல் போல எளிதானது அல்ல சமயத்தின் குருமரபினரை வரிசைப்படுத்தல். காலம் ஏழாம் நூற்றாண்டு, பாண்டிய பல்லவ பேரரசுகள் தமிழகத்தை களப்பிரரிடமிருந்து மீட்டு ஆண்டுகொண்டிருந்த சமயம். சைவ சமயம் தமிழகத்தில் பரவலாக்கம் பெற்ற இந்த பக்தி இயக்க காலகட்டத்தில் முதன்மையான தொண்டர்களாக அப்பர் சம்பந்தர் இருவரும் இருந்தனர். முறையே அப்பர் தொண்டைநாட்டிலும், சம்பந்தர் சோழ நாட்டிலும் பிறந்தவர்கள். இருவரும் தமிழ்ப்பதிகங்களை பாடி ஊர்தோறும் பயணித்து சமயம் வளர்த்தனர். சிவபெருமானின் மறத்தையும் அருளையும் மொழியின் சுவையோடு தமிழகத்...